×

கூடுதல் விலைக்கு மது விற்ற 11 ஊழியர்கள் சஸ்பெண்ட்

விருதுநகர்: கூடுதல் விலைக்கு மது விற்ற 11 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களிடம் ரூ.53 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த செப்.8, 9ம் தேதிகளில் மேலாண்மை இயக்குநர் விசாகன் திடீர் ஆய்வு நடத்தினார். இதில் 8 கடைகளின் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது உறுதியானது. உள்விசாரணை நடத்தும் வகையில் 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மேலாண்மை இயக்குநர் விசாகனின் உத்தரவின்பேரில் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு 15 டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளின் பணியாளர்களான முத்துமாரியப்பன், தென்னரசு, முத்துக்குமார் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 9 கடைகளில் ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த கடைகளின் பணியாளர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.53,100 வசூலிக்கப்பட்டது.

The post கூடுதல் விலைக்கு மது விற்ற 11 ஊழியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Tasmak ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!